அமைச்சர்: உணவகங்களில் உள்ளூர் சமையல்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்

 

எதிர்வரும் ஜூலை 1 லிருந்து நாட்டிலுள்ள உணவகங்கள் உள்ளூர் சமைகள்காரர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று மலேசிய மனிதவள அமைச்சு கூறுகிறது.

இருப்பினும், உள்ளூர் சமையல்காரர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கு உணவகங்களுக்கு இவ்வாண்டு இறுதி வரையில் அவகாசம் அளிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் மு. குலசேகரன் கூறினார்.

அனைத்து உணவகங்களிலும் உள்ளூர் சமையல்காரர்கள் அமர்த்தப்படுவதற்கு வகைசெய்யும் சட்டவிதி ஜனவரி 1, 2019 இல் அமலுக்கு வருகிறது.

உள்ளூர்காரர்கள் சமையல்காரர்களாக வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும். அதில் விட்டுக் கொடுப்பதற்கு இடமே இல்லை. அதை டிசம்பர் 31 க்குள் செய்வதற்குள் செய்தாக வேண்டும் என்று நேற்று குலசேகரன் பெர்னாமாவிடம் கூறினார்.