இயக்குநர் பாரதிராஜா மீது சென்னை போலீஸ் வழக்குப் பதிவு

சென்னை; இயக்குநர் பாரதிராஜா மீது சென்னை திருவல்லிக்கேணி போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் பாரதிராஜா மீது புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரை ஏற்று பாரதிராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஐபிசி 153, 501 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பாரதிராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்து மத கடவுகள்களை இழிவுபடுத்தி பேசியதாக பாரதிராஜா மீது வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com