இராமசாமி: போலீஸ் துறையை மூடி விடலாமே

ramasamyபோலீஸ்மீது  ஆத்திரம்  கொண்ட  பினாங்கு  துணை  முதலமைச்சர்  பி.இராமசாமி,  போலீஸ்துறையையே  இழுத்து  மூடிவிடலாம்  என்று  கூறினார்.

ஒரு  இந்து  பெண்ணும்  முஸ்லிமாக  மாறிய  அவரின்  முன்னாள்  கணவரும்  சம்பந்தப்பட்ட  விவகாரத்தில்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்,  போலீஸ்  செயல்படாமலிருப்பதை  நியாயப்படுத்திப்  பேசியதற்கு  எதிர்வினையாக  இராமசாமி  இவ்வாறு  கூறினார்.

“பாதிக்கப்பட்ட  ஒருவருக்குப்  பாதுகாப்பு  கொடுக்க  முடியவில்லை  என்றால்  போலீஸ்  துறையையே  இழுத்து  மூடிவிடலாம்”,  என்றாரவர்.

போலீஸ்  படைத்  தலைவரைத்  தற்காத்துப்  பேசிய  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியையும்  டிஏபி  தலைவர்  சாடினார்.