ரபிஸி: பிகேஆர் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயலவில்லை

rafiziகடந்த  மாதம் பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  வழக்கில்  நீதிமன்றத் தீர்ப்பு  கடும்  சினத்தை  ஏற்படுத்தி  இருந்தாலும்,   பிஎன்  அரசாங்கத்தை  ஜனநாயக  முறையில்  வீழ்த்துவதே கட்சியின்  நோக்கமாகும்  என்று  பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி  வலியுறுத்தினார்.

“ஐந்து  மாதங்களில்  மக்கள்  நஜிப்பை  வீழ்த்துவார்கள்  என  உறுதி  கூறுகிறேன்”  என  மார்ச்  7-இல்,  டிவிட்டரில் பதிவிட்டிருந்ததன்  தொடர்பில் போலீசாரின்  விசாரணைக்கு  ஆளாகியுள்ள பத்து  தொகுதி  எம்பி தியான்  சுவாவுக்காக  பரிந்து  பேசியபோது  ரபிஸி  இவ்வாறு  கூறினார்.

மேல்முறையீட்டு  நீதிமன்றம், குதப்புணர்ச்சி  வழக்கில்  அன்வார்  விடுவிக்கப்பட்டதை  இரத்துச்  செய்து  அவருக்கு ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை விதித்ததை  அடுத்து  சுவா  டிவிட்டரில்  அவ்வாறு  பதிவிட்டிருந்தார்.

“…வேறு  வகையில்  அரசாங்கத்தைக்  கவிழ்க்கும்  நோக்கம்  இருக்குமானால்  ஜனநாயக  முறைகளில்  பங்கெடுத்துக்  கொண்டிருக்க  மாட்டோம்”,  என்றும்  ரபிஸி  கூறினார்.