சுஹாகாம்: மே தினப் பேரணியை அனுமதிப்பீர்

may 1தேசிய  மனித  உரிமை  ஆணையம் (சுஹாகாம்),   மே 1  பேரணி  நடப்பதை  போலீஸ்  அனுமதிக்க  வேண்டும்  என  வலியுறுத்தியுள்ளது.

“மே 1 நிகழ்வுக்கு போலீசார் (பேச்சு நடத்த)  ஏற்பாட்டாளர்களை  அழைத்திருப்பது நம்பிக்கை  அளிக்கிறது”, என  சுஹாகாம் துணைத்  தலைவர்  காவ்  லேக் டீ  கூறினார்.

பிரச்னைகளுக்குத்  தீர்வுகண்டு  மே1  பேரணிக்கு  அனுமதி  வழங்கி . பேரணி  நடப்பதற்கும்  போலீசார்  உதவ வேண்டும் என்றவர்  கேட்டுக்கொண்டார்.