செம்பருத்தி வாசகர்களின் கவனத்திற்கு…

செம்பருத்தி வாசகர்களின் கவனத்திற்கு,

தற்போது செம்பருத்தியின் வாசகர்கள் அதிகமான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அவர்களின் கருத்து சுதந்திரத்தைச் செம்பருத்தி வரவேற்கிறது. அதன் எல்லை எது என்பதை நிர்ணயம் செய்யும் பொறுப்பையும் வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தணிக்கை என்ற பெயரில் உங்களின் கருத்துகளை முடக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அதே வேளையில், சுதந்திரம் என்ற வேட்கைக்கு ஒரு பொறுப்புணர்ச்சி தேவை என்பதையும் உணர்கிறோம்.

செம்பருத்தி தணிக்கையற்ற கொள்கையை கடைபிடிப்பதால் சில வேளைகளில் எல்லையை தாண்டிய கருத்துகளும் பதிவேற்றம் கண்டதுண்டு. அதனால் பாதிப்பும் உண்டு.

எனவே, கருத்துகளை பதிவு செய்பவர்கள்,  கருத்து சுதந்திரத்திற்கும் – பொறுப்புணர்ச்சிக்கும் உள்ள தொடர்பை கருத்தில் கொண்டு, செம்பருத்தியின் தணிக்கையற்ற கொள்கைக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆசிரியர் குழு.