மன்னிப்பு கேட்காததால் காலிட்டின் கோரிக்கையை சுல்தான் நிராகரித்தார்

khalid selசிலாங்கூர்  சுல்தான்  ஷராபுதின்  இட்ரிஸ்  ஷாவைச்  சந்திக்க ஷா  ஆலம்  எம்பி  காலிட்  அப்துல்  சமத்  செய்து  கொண்டிருந்த  விண்ணப்பம்  நிராகரிக்கப்பட்டது.

அந்த பாஸ்  எம்பி  தம்  செயலுக்கு  மன்னிப்பு  கேட்கவில்லை  என்பதுதான் அதற்குக்  காரணமாகும்.

சிலாங்கூர்  இஸ்லாமிய  சமய  மன்ற(மாயிஸ்)த்தின்  அதிகாரத்தைக்  கட்டுப்படுத்த  வேண்டும்  என்று  காலிட்  கூறியதை  சுல்தான்  கண்டித்திருந்தார்.  அதைப்  பற்றி  விளக்கமளிக்கவே  காலிட்,    சுல்தானைச்  சந்திக்க  விரும்பினார்.

ஆனால், அவரது  கோரிக்கை  ஏற்கப்படவில்லை  என்பதையும்  அதற்கான  காரணத்தையும்  சிலாங்கூர்  சுல்தானின் தனி  செயலாளர்  முகம்மட்  முனிர்  பானி  இன்று  அறிவித்தார்.

கடிதத்தில்  மன்னிப்பு  கேட்டுக்கொண்டிருந்தால் சுல்தான்  ஷராபுதின்  அவருக்குப்  பேட்டியளிக்க  சம்மதித்திருக்கலாம்  என  முனிரை  மேற்கோள்காட்டி  எஜண்டா  டெய்லி செய்தித்தளம்  கூறியிருந்தது.