‘அன்வாருக்கு சிலாங்கூர் அரசமைப்பு புரியவில்லை’

nohபிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,   சிலாங்கூர்  மந்திரி  புசாராக  தம்  மனைவியைத்  தேர்ந்தெடுத்திருப்பது  அவருக்கு  மாநில  அரசமைப்புப்  புரிந்துகொள்ளவில்லை  என்பதைக் காண்பிப்பதாக  சிலாங்கூர்  பாரிசான்  நேசனல் (பிஎன்) தலைவர்  நோ  ஒமார்  கூறுகிறார்.

“மந்திரி  புசாரை  மாற்ற  வேண்டுமானால்  அதற்கு  இரண்டு வழிகள்தான்  உண்டு. இப்போதைய  மந்திரி  புசார் (அப்துல் காலிட்  இப்ராகிம்) தானாக  பதவி  விலக  வேண்டும்  அல்லது  சட்டமன்றத்தில்  அவருக்கு  எதிராக  நம்பிக்கையில்லா  தீர்மானம்  கொண்டுவர  வேண்டும்”, என்றாரவர்.

பிகேஆர்,  அப்துல்  காலிட்டுக்குப்  பதிலாக  சிலாங்கூர்  மந்திரி  புசார் பதவிக்கான  வேட்பாளராக  கட்சித்  தலைவர்  வான் அசீசாவைப்  பெயர் குறிப்பிட்டிருப்பது பற்றிக்  கருத்துரைத்தபோது  இவ்வாறு  கூறினார்.