வெடிப்புகள் காணப்பட்டாலும் பாக்கத்தான் தாக்குப்பிடிக்கும், அன்வார் நம்புகிறார்

 

Anwar - Pakatan cracksசிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பக்கத்தான் ரக்யாட் கூட்டணிக்குள்ளேயே நடந்து வரும் மோதல்கள் குறித்து இதுவரையில் மௌனமாக இருந்து வந்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் உடன்பாட்டை வளர்க்கும் அதன் கடந்த கால செயல்பாட்டின் அடிப்படையில் பாக்கத்தான் நிலைத்திருக்கும் என்றார்.

பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் சிலாங்கூர் மந்திரி புசாராக காலிட் இப்ராகிம் தொடர்ந்து இருப்பதை வலியுறுத்தி இருந்ததைத் தொடர்ந்து டிஎபியின் தலைமைச் செயலாளர் குவான் எங் பாக்கத்தான் ரக்யாட் சிதறக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பாக்கத்தான் நிலைத்திருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அன்வார் சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பிகேஆர் காலிட்டை அகற்றி அவர் இடத்தில் பிகேஆரின் தலைவர் வான் அசிஸாவை நியமிக்க கட்சி எடுத்துள்ள முடிவிலிருந்து பிகேஆர் பின்வாங்குவதற்கு தயார் என்பதற்கான நோக்கம் எதனையும் அவர் வெளியிடவில்லை.