கேஜே: கீகீ செய்தது குற்றம் என்றால் பாங்கொலியைக் குறை சொன்னதும் குற்றமே

kjசாலையில் முரட்டுத்தனமாக  நடந்து  கொண்டார்  என்பதற்காக  சித்தி  பாய்ரா  அஷிகின்  மீது  குற்றம்சாட்டப்பட்டதுபோல்  முகநூலில்  அஸான் பாங்கொலியின்  சத்தம்  அதிகம்  என்று  முகநூலில்  குறை  சொன்னவர்மீதும்  குற்றம்  சாட்டப்பட  வேண்டும்  என்று  இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுதின்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“மன்னிப்பு  கேட்ட  பின்னரும் கீகீ-மீது  குற்றம்  சுமத்தப்பட்டது. அது சரிதான். அதேபோல், இந்த  முகநூல் பயனர்மீதும்  குற்றம்  சுமத்தப்பட  வேண்டும். அவருக்கு  ஒரு பாடம் படித்துக் கொடுக்க  வேண்டும்”.

கெல்வின் இப்  என்ற  இளைஞர், ஹரி  ராயாவின்போது  காலைநேர பாங்கொலியின்  சத்தம்  அதிகமாக  இருந்ததாக  முகநூலில்  குறை  சொல்லியது  பற்றி  கைரி  இவ்வாறு  கூறினார்.