பாஸ் முடிவை ஏற்றார் காலிட்

d dayசிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவி மற்றும்  மாநில  ஆட்சிக்குழு  தொடர்பில்  பாஸ்  கட்சி  செய்துள்ள  முடிவைத்  திறந்த  மனத்துடன்  ஏற்பதாக  அப்துல்  காலிட்  இப்ராகிம்  கூறியுள்ளார்.

அடுத்து  மாநில  சுல்தானைச்  சந்தித்து  “தொடர்ந்து  எடுக்க  வேண்டிய  நடவடிக்கைகள்  குறித்து அவருக்கு  ஆலோசனை”  கூறப்போவதாக அவர்  சொன்னார்.

“சுல்தான்  இறுதி  முடிவெடுக்கும்வரை,  அரசியல்  நெருக்கடியால்  மக்கள்  துன்பப்படாமலிருக்க  பாஸின்  நான்கு  எக்ஸ்கோ  உறுப்பினர்களுடன்  மாநில  நிர்வாகத்தைத்  தொடர்ந்து  நடத்திச்  செல்வேன்”, என  காலிட்  கூறினார்.