காலிட்-குறைகூறலை நிறுத்துங்கள்: பாஸ் தலைவர் கோரிக்கை

mariahசிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமை  வெளிப்படையாகக்  குறைகூறுவதை  அனைவரும்  நிறுத்திக்  கொள்ள  வேண்டும்  என்று  சிலாங்கூர்  பாஸ்  துணை  ஆணையர்  சித்தி  மரியா  மஹ்மூட்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சிலாங்கூருக்கு  காலிட்டின்  பங்களிப்பை  மறக்கலாகாது  என  பாஸ்  மத்திய  குழு  உறுப்பினருமான  அவர்  குறிப்பிட்டார்.

“சிலாங்கூர்  சட்டமன்றத்தில்  பக்கத்தான்  ரக்யாட்  மூன்றில்  இரண்டு  பங்கு  இடங்களுக்குமேல்  பெற்றதற்கு  அவரும்    காரணமாவார்”, என  மரியா  முகநூலில்  பதவிட்டிருந்தார்.

“அவர்  கண்ணைப்  பார்த்துப்  பேசமுடியாத  அளவுக்குச்  சென்று  விடக்  கூடாது- அது  இஸ்லாமிய  சகோதரத்துவத்தையே  நாசமாக்கி விடும்”, என்றாரவர்.