எம்எச்17 விமான விபத்தில் பலியானவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது

 

Mh17கிழக்கு உக்ரேய்னில் நிகழந்த எம்எச்17 விமான விபத்தில் பலியான 20 மலேசியர்களின் சடலங்கள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இத்துயரச் சம்பவத்திற்கு இன்று நாடு தழுவிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

தனிப்பட்ட விமானத்தில் பலியான 20 மலேசியர்களின் சடலங்கள் இன்று காலை மணி 9.45 மணி அளவில் அம்ஸ்டர்டமிலிருந்து சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்து சேரும்.

மலேசியர்கள் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டு, ஒரு நிமிட மௌனம் அனுசரித்து தங்களுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றனர்.