உப்புமா கம்பெனி – கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்ட்-2வின் தலைப்பு!!

uppumaa companyசமீபத்தில், பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ”கதை திரைக்கதை வசனம் இயக்கம்”. தம்பி ராமைய்யா தவிர இப்படத்தில் நடித்த அனைவரும் புதுமுகங்கள் தான். ஆனாலும் கெஸ்ட்ரோலில் ஆர்யா, விஷால், அமலாபால், டாப்சி, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கதையே இல்லாமல் வெளிவந்த இப்படம், பெரிய வெற்றி பெற்றுள்ளது. புதியபாதை படத்திற்கு பிறகு பார்த்திபனுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

இந்த உற்சாகத்தோடு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக பார்த்திபன் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ இரண்டாம் பாகத்திற்கு ”உப்புமா கம்பெனி” என்று பெயர் வைத்துள்ளார்.

தற்போது படத்திற்கு தலைப்பு மட்டுமே முடிவாகி இருப்பதாகவும், இன்னும் கதையோ, யார் யார் நடிக்கிறார்கள் போன்ற எதுவுமே முடிவாகவில்லை என்றும், விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பையும் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் பார்த்திபன்.