நெகாரா கூ ஒரு சங்கமல்ல என ஆர்ஓஎஸ்ஸிடம் தெரிவிக்கப்பட்டது

negaraநெகாரா  கூ  இயக்கக்  குழு  தலைவர்  ஜைட்  கமருடின், அது பதிவு  செய்யப்படாத  அமைப்பு  என்று  கூறப்படுவதன்  தொடர்பில் சங்கப்  பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யைச்  சந்தித்து  அதன் நடவடிக்கைகள் பற்றி விளக்கியுள்ளார்.

நேற்றுக்  காலை நெகாராகூ  புரவலர்  அம்பிகா  ஸ்ரீநிவாசனுடன்  ஜைட்  ஆர்ஓஎஸ்சைச்  சந்தித்தார்.

சந்திப்புக்குப்  பின்னர்  செய்தியாளர்களைச் சந்தித்த  ஜைட், நெகாராகூ  ஒரு இயக்கம்தானே  தவிர  ஒரு  சங்கம்  அல்ல  என்பதை  ஆர்ஓஎஸ்ஸுக்குத்  தெரியப்படுத்தியதாகக்  கூறினார்.

நாட்டுப்  பண் பெயரையே  நெகாராகூ  கொண்டிருந்தாலும் குழப்பத்தையோ சர்ச்சையையோ  உண்டாக்கும்  நோக்கம்  அதற்கில்லை  என்றாரவர்.

நெகாராகூ  என்பது  மக்களின்  இயக்கம். நீதி, சமத்துவம், அமைதி  ஆகியவற்றுக்காக  போராடும் 80  அரசுசாரா அமைப்புகள் (என்ஜிஓ) அதில்  அதில்  இடம்பெற்றுள்ளன.