சேவை செய்ய முடியாவிட்டால் மஇகா தலைவர் பதவி விலகுவது நல்லது

mohanமலேசிய  இந்தியர்களுக்குச்  சேவை  செய்ய  முடியாவிட்டால்  மஇகா  தலைவர் பதவி  விலகுவதே  நல்லது  என  அக்கட்சியின்   இளைஞர்  பகுதி  முன்னாள்  தலைவர்  டி.மோகன்  கூறியுள்ளார்.

“சமூகத்துக்குச்  சேவை  செய்யும் ஆர்வம்  இல்லையென்றால், ஜி.பழனிவேல்  தகுதியான  ஒருவரிடம்  பொறுப்பை  ஒப்படைத்து  பதவி  விலகுவதே  நல்லது”, என மோகன்  அறிக்கை  ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.

செனட்டர்  பதவிக்குக்  கட்சியைச்  சேர்ந்த  ஒருவரை  செனட்டராக  நியமனம்  செய்வதில்  தாமதம்  காட்டப்பட்டது  குறித்து  பழனிவேல்மீது  ஆத்திரம்  கொண்டு  மோகன்  இவ்வாறு  கூறியுள்ளார்.

தாமதத்துக்கு  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்கைக்  காரணம் காட்டுவதும்  ஒரு  நொண்டிச்  சாக்கு  என்றவர்  குறை கூறினார்.