அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய தீவிரவாதிகள்

libya_us_embassy_001லிபியாவில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் அங்கு இயங்கும் தீவிரவாத குழுக்கள், அந்நாட்டு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில் லிபியாவில் இயங்கும் அமெரிக்க தூதரகத்தை  தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.

தீவிரவாதிகளால் சமீபத்தில் தலைநகர் திரிபோலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

அப்போது நடந்த சண்டையில் பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து திரிபோலியில் உள்ள தனது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அமெரிக்கா மால்டாவில் உள்ள வல்லெட்பாவுக்கு மாற்றியது.

அலுவலகம் மட்டும் மாற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று அமெரிக்க தூதரக அலுவலகத்தை தீவிரவாதிகள் கைப்பற்றினர். இது தொடர்பான காணொளி காட்சிகளை இணையத்தில் சேர்த்துள்ளனர்.

தூதரகம் கைப்பற்றப்பட்டமை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்தனர். அதுபற்றிய விவரங்களை லிபியா அரசிடம் இருந்து எதிர்ப்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே திரிபோலியில் உள்ள அரசு, அரசு அலுவலங்களையும் தீவிரவாதிகள் நேற்று கைப்பற்றினர்.

ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளித்த அவர்கள் உயர் அதிகாரிகளை மிரட்டினர். லிபியாவில் கடந்த வாரம் அரசு பதவி விலகியது. தற்போது பிரதமர் அப்துல்லா அல்–தானி தலைமையில் இடைக்கால அரசு பதவி வகிக்கிறது.