“திமிர் பிடித்த மலாய்க்காரர் அல்லாதவர்கள்” என்ற தாக்குதல் டிஎபியை இலக்காகக் கொண்டது என்கிறார் ஸாகிட்

 

Zahid-Arrogantமலாய்க்காரர் அல்லாதவர் திமிர் பிடித்தவர்களாகி வருகிறார்கள் என்று தாம் விடுத்த அறிக்கை டிஎபியின் தலைவர்களையும், குறிப்பாக அதன் ஆதரவாளர்களையும் இலக்காகக் கொண்டது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று கூறியதாக சொல்லப்படுகிறது.

மலேசியாவின் பெரும்பான்மையான மலாய்க்காரர் அல்லாதவர்கள் மிதவாதிகள். அவர்கள் இதர இனத்தினரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்கின்றனர் என்றாரவர்.

ஆனால், டிஎபி ஆதரவாளர்கள் அவர்களின் திமிரான அரசியல் செயல்பாட்டு முறையால் வேறுபட்ட அணுகுமுறையை எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது என்று ஸாகிட் கூறியதாக த ஸ்டார் இன்று தெரிவிக்கிறது.

மலாய்க்காரர் அல்லாதவர்கள் அதிகப்படியான திமிர் பிடித்தவர்களாகி வருகின்றனர். அவர்கள் பூமிபுத்ராக்களையும், ஆட்சியாளர்களையும், இஸ்லாத்தையும் அவமதிக்கின்றனர் என்று தாம் முன்பு கூறியதாக வெளிவந்துள்ள செய்திகள் திரிக்கப்பட்டவை என்றும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.