சுல்தானின் ஆணையை மீறியதற்காக பிகேஆர் கடுமையாக கண்டிக்கப்பட்டது

 

candமந்திரி புசார் பதவிக்கு சுல்தானின் ஆணைக்கு மாறாக ஒரே ஒரு பெயரை மட்டும் அரண்மனையிடம் தாக்கல் செய்ததற்காக அரண்மனை பிகேஆரை கடுமையாக கண்டித்துள்ளது என்று கட்சிக்குள்ளிருப்பவர்கள் கூறினர்.

அரண்மனையிலிருந்து நேற்று பிகேஆர் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அக்கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மந்திரி புசார் பதவிக்கு சாத்தியமான வேட்பாளராக (பிகேஆர் தலைவர்) டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலின் பெயரை பெற்றுக்கொண்டுள்ளதாக அரண்மனைக் கடிதம் தெரிவித்ததோடு இரண்டிற்கும் கூடுதலான பெயர்களை அனுப்பாதற்காக பிகேஆருக்கு தெரிவிக்கப்பட்ட கடுமையான கண்டனம் அக்கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.