வெட்டிய தலையுடன் புகைப்படம்: பெண் தீவிரவாதியின் வெறிச்செயல்

jihadi_doctor_001ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் உள்ள பெண் தீவிரவாதி ஒருவர் நபர் ஒருவரின் வெட்டிய தலையை கையில் பிடித்த வண்ணம் புகைப்படம் எடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்த முடிவெடுத்துள்ள பிரித்தானிய பிரதமர் கேமரூன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை எச்சரிக்கும் வகையில், தீவிரவாதிகளால் அடுத்தடுத்து பிணைக்கைதிகளின் தலைதுண்டிப்பு நடந்து வருகின்றது.

இந்நிலையில் தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று அந்த அமைப்பை சேர்ந்த உசாமா (Usama) என்ற பெண் தீவிரவாதி, வெட்டிய தலையுடன் புகைப்படம் எடுத்து அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய மருத்துவ கல்லூரி மாணவியான உசாமா என்ற இந்த பெண் தீவிரவாதி, சிரியாவில் உள்ள ரக்கா (Raqqa) நகரில் மருத்துவராக பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது.

மேலும் இந்த புகைப்படத்தில் உசாமாவுடன் இரு சிறுவர்கள் நின்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு பிணைக்கைதியின் தலையை துண்டிப்போம்: ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் உள்ள 2வது பிரித்தானிய பிணைக்கைதியின் தலையை துண்டிப்பதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் பிரித்தானியாவை சேர்ந்த டேவின் ஹெய்ன்சை (David Hainse) என்ற நபரின் தலை துண்டித்து கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் தங்களுக்கு எதிராக போர் புரிபவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் தொடர்ந்து பிற நாடுகளுடன் செயல்பட்டால், மற்றொரு பிணைக்கைதியான ஹென்னிங் (Henning age-47) என்பவரின் தலை துண்டித்து கொலை செய்வோம் என ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் ஜான் (John) என்ற தீவிரவாதி காணொளி ஒன்றில் மிரட்டல் விடுத்துள்ளான்.

ஹென்னிங் பிரித்தானியாவின் மான்செஸ்டரில் (Manchester) உள்ள எக்லெசில் (Eclas) இருந்து வந்த முன்னாள் டாக்சி ஓட்டுநர் என கூறப்படுகிறது.

இவர் கடந்தாண்டு சமூக பணியில் ஈடுபடுவதற்காக துருக்கியில் இருந்து சிரியா எல்லைக்குள் வந்தபோது கடத்தப்பட்டுள்ளார்.