பாகிஸ்தானின் கதையையே முடிக்கமுடியும்: பிலாவலுக்கு சுப்ரமணியசாமி பதிலடி

subramanian-swamyபுதுடெல்லி, செப். 20- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, அவரது கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாகாண தொண்டர்களை சந்தித்தபோது, “மற்ற மாகாணங்களை போல் காஷ்மீர் மாகாணமும் பாகிஸ்தானுக்கு சொந்தமானது.

ஆகையால் அதில் ஒரு அங்குலம் கூட யாருக்கும் விட்டுத்தர முடியாது” என பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு உடனடியாக பா.ஜ.க பதிலடி கொடுத்துள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியசாமி கூறுகையில், “பாகிஸ்தானின் கதையையே எங்களால் முடிக்கமுடியும். ஆனால் நாங்கள் போரை விரும்பாததால் அதை செய்யவில்லை. காஷ்மீர் மாநிலம் இந்தியாவிற்குள் அடங்கிய பகுதி” என்றார்.

TAGS: