தமிழ், கணிதம் தேர்வுத் தாள்களும் கசிந்துள்ளன என புகார்

 

Tamil language papers leaked1இந்த ஆண்டின் யுபிஎஸ்ஆர் தேர்வுக்கான தமிழ் மற்றும் கணிதம் ஆகிய தேர்வுத் தாள்களும் கசிந்துள்ளன என்று புகார் செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் தஜுடின் முகமட் இசா கூறினார்.

இந்தப் புகாரை மலேசியன் எக்ஸாமினேசன் சிண்டிகேட் (எம்பிஎம்) இன்று காலை மணி 11.00 க்கு புத்ராஜெயாவில் செய்ததாக அவர் கூறினார்.

“நாங்கள் விசாரணையை தொடங்குவோம்”, என்றாரவர்.

மாணவர்கள் செப்டெம்பர் 10 இல் தமிழ் மற்றும் கணிதம் ஆகியவற்றுக்கான தேர்வை எழுதினர்.