கண்ணீர் புகைக்குண்டுகள் வெடிப்பதில் கைதேர்ந்த மலேசியப் போலீசிடம் ஹாங்காங் போலீஸ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

changஆர்ப்பாட்டக்காரர்களைக்   கண்ணீர்  புகைக்குண்டுகளை  வீசி  கலைக்கும்  வித்தை  ஹாங்காங்  போலீசாருக்குத்  தெரியவில்லையாம். அதை  அவர்கள்  மலேசியப்  போலீசிடமிருந்து  கற்றுக்கொள்ள  வேண்டுமாம். பிகேஆர்  சட்டமன்ற  உறுப்பினர்  ஒருவர்  இப்படி  கிண்டலடித்துள்ளார்.

ஹாங்காங்  போலீசார்  மக்களாட்சி-ஆதரவு  ஆர்ப்பாட்டக்காரர்களைக்  கலைக்க  87 கண்னீர்  புகைக்  குண்டுகளை  வெடித்தார்கள்  என்ற  செய்தி  தொடர்பில் தேஜா  சட்டமன்ற உறுப்பினர்  சாங்  லி  காங்  இவ்வாறு  கூறினார்.

“என்ன? ஹாங்காங்  போலீசார்  87  கண்ணீர்  புகைக்  குண்டுகளைத்தான்  வெடித்தார்களா?

“அட  போங்கய்யா! மலேசிய  போலீசார்  பெர்சே  பேரணியைக்  கலைக்க  967  கண்ணீர்  புகைக்குண்டுகள்  வெடித்தார்கள், தெரியுமா. அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்.”, என்று  சாங்  குத்தலாக  டிவிட்  செய்துள்ளார்.