சிலாங்கூரில் யார் ‘போஸ்’ என்பதை அஸ்மின் அன்வாருக்குக் காண்பிக்க வேண்டும்

azminபுதிதாக  நியமிக்கப்பட்டிருக்கும்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி,   சிலாங்கூர்  மாநிலத்துக்கு  யார்  போஸ்  என்பதை  அன்வாருக்கும்  அவரின்  கையாள்களுக்கும்  நிரூபிக்க  வேண்டும்  என்கிறார்  மசீச  முன்னாள்  தலைவர்  டாக்டர்  சுவா  சொய்  லெக்.

அன்வாரின்  இடத்துக்கு  வரும்  தகுதி  பெற்றுள்ள  அஸ்மின், தம்  முத்திரையை  அழுத்தமாக  பதித்து  தாம்  ஒரு கைப்பாவை  மந்திரி  புசார்  அல்ல  என்பதைக்  காண்பிக்க  வேண்டும்  என  சுவா  கூறினார்.

கட்சிக்குள்ளும்  வெளியிலும்  உள்ள  அவரின்  அரசியல்  எதிரிகள்  அவரை  அணுக்கமாகக்  கவனித்துக்  கொண்டிருப்பார்கள்  என்றவர்  சுட்டிக்காட்டினார்.

“சிலாங்கூர்  சுல்தானும்  அவரைக்  கண்காணித்துக்  கொண்டிருப்பார்  என்பதை  மறக்கக்  கூடாது”, என்றாரவர்.