மலேசியாகினிக்கு இரண்டு தடவை வழக்கில் வெற்றி கிடைத்தது; பிரசுர உரிமம் கிடைக்கவில்லை

mkiniமலேசியாகினிக்கு  நாளிதழ்  வெளியிடும்  உரிமை  உண்டு  என்று  நீதிமன்றங்கள்  தீர்ப்பளித்துள்ள  போதிலும்  அரசாங்கம்  பிரசுர  உரிமம்  கொடுக்க  தொடர்ந்து  மறுத்து  வருகிறது.

கடந்த வாரம்,  உள்துறை  அமைச்சு  தலைமை  செயல்  அதிகாரி  பிரமேஷ்  சந்திரனுக்கு  அனுப்பிய  கடிதத்தில்,  “மலேசியாகினி  சர்ச்சையை உண்டுபண்னும்  செய்திகளை  வெளியிடுவதை  வழக்கமாகக்  கொண்டிருப்பதாலும்  நடுநிலைமை  பிறழ்ந்து  செய்திகளை  வெளியிடுவதாலும்  அதற்கான  பிரசுர  உரிமையை  நிராகரிக்க முடிவு  செய்திருப்பதாக”க்  கூறியது.

அதன்  செய்திகள் “தேசிய  தலைவர்களுக்கு  எதிராக  வெறுப்பை  ஏற்படுத்தலாம்”  என்பதையும்  உள்துறை  அமைச்சின்  பிரசுர  கட்டுப்பாட்டு, அல்குர்ஆன் வாசகப் பிரிவின்  தலைவர்  ஹஷிமா  நிக்  ஜப்பார்  வலியுறுத்தி  இருந்தார்.

உள்துறை  அமைச்சின்  முடிவை  எதிர்த்து  மீண்டும்  முறையீடு  செய்யப்போவதாகவும் ,  இம்முறை  பிரசுர  உரிமை  கொடுக்க  நீதிமன்றம்  அரசாங்கத்துக்கு  உத்தரவிடும்  என்று  எதிர்பார்ப்பதாகவும்  மலேசியாகினி  தலைமை  செய்தியாசிரியர்  ஸ்டீபன்  கான்  கூறினார்.