சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை! சம்மதிப்பவருக்கே ஜனாதிபதி தேர்தலில் வாக்கு!

sivajilingamஇனப்பிரச்சினை தொடர்பில் எவர் தரப்பு சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சு வார்த்தைக்கு சம்மதிக்கின்றாரோ அவருக்கே தமிழ் மக்களது வாக்குக்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் விழுமென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பு வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்.

யாழ்.ஊடக அமையத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த தரப்பினை ஆதரிப்பது என்பது பற்றி கூட்டமைப்பு முடிவு செய்து அறிவிக்கும். ஆனாலும் இனப்பிரச்சினை தொடர்பில் எவர் தரப்பு சர்வதேச மத்தியஸ்தத்தின் கீழ் பேச்சு வார்த்தைக்கு சம்மதிக்கின்றாரோ அவருக்கே தமிழ் மக்களது வாக்குக்கள் விழுமென்பதே எனது கருத்தாகும்.

ஏற்கனவே வடமாகாணசபை தேர்தலை நடத்தி மூக்குடைப்பட்ட மஹிந்த இப்போது ஜனாதிபதி தேர்தல் கனவுடன் வடக்கிற்கு வந்துள்ளார்.
அவரையும் டக்ளஸையும் பற்றி சிந்திக்கையில் எனக்கு பரமார்ந்த குருவும் அவரது சீடர்களும் கதை தான் ஞாபகத்திற்கு வருகின்றது. அவர்கள் தீக்கொள்ளியுடன் போய் ஆற்றைக்கடக்க செய்த ஆராய்ச்சிகள் பலரும் அறிந்ததே.

அதே போன்றே இப்போது மஹிந்தவும் டக்ளஸினது கதையை கேட்டு வடக்கிற்கு வந்து போயுள்ளார்.எமது மக்களை பொறுத்த வரை வடமாகாணசபை தொடர்பினில் விமர்சனங்கள் இருந்தாலும் தேர்தலென வருகையில் மக்களை அவற்றை புறந்தள்ளிவிடுவரெனவும் அவர் தெரிவித்தார்.

TAGS: