அன்வார்: நாட்டை விட்டு வெளியேறும் திட்டம் இல்லை

 

Anwar no exileதமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குதப்புணர்ச்சி வழக்கில் தாம் சிறையில் அடைக்கப்படும் சாத்தியம் இருந்த போதிலும், தாம் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.

அன்வார் தற்போது பிரிட்டனில் இருக்கிறார். முஸ்லிம் உலகில் உயர்கல்வி சீர்திருத்தம் குறித்த ஒரு பணிப்படை கூட்டத்தில் பங்கேற்பதற்கு அவர் அங்கு சென்றுள்ளார்.

“பெரும்பாலான முஸ்லிம் அறிஞர்கள் இங்கேயே (யுகேயில்) தங்கிவிடுமாறு வலியுறுத்துகின்றனர். நாம் முடியாது என்று கூறினேன். இது கொள்கை அடிப்படையிலானது. ஓர் ஊழல் மற்றும் தெளிவற்ற அமைவுமுறையை எதிர்க்கையில் எவ்வளவு துயரங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை நான் அறிவேன்”, என்று ஒரு நேர்காணலில் அவர் கூறியதாக யுகேயின் டெலிகிராப் கூறுகிறது.

மார்ச் 7 இல், அவருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை வித்திக்கப்பட்டது அவர் மேல்முறையீடு செய்துள்ளதால், அவர் சிறையில் அடைக்கப்படவில்லை.

அவரது மேல்முறையீடு அக்டோபர் 28 இல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.