நாங்கள் புல்லுருவிகளா? கெராக்கான்மீது பெர்காசா பாய்ச்சல்

yahyaகெராக்கான்  மாநாட்டில் “புல்லுருவி” என்ஜிஓ-கள்  பற்றிக்  குறிப்பிடப்பட்டது  பெர்காசாவை  மறுபடியும்  உசுப்பி  விட்டிருக்கிறது.

சிலாங்கூர்  பெர்காசா  தலைவர் யஹ்யா  அபு  பக்கார்,  மலாய்  மேலாண்மைக்காக  போராடும்  அந்த  அமைப்பைக்    கருத்தில்  வைத்துதான் கெராக்கான்  இளைஞர்  தலைவர்  டான்  கெங்  லியாங்,    அவ்வாறு  குறிப்பிட்டாரா  என  முகநூலில்  வினவினார்.

“கெராக்கான்  இளைஞர் தலைவர்  பெர்காசாவைப்  புல்லுருவி  என்ஜிஓ என்று  குறிப்பிட்டிருந்தால் அது  பக்குவமான  பேச்சல்ல  என்றுதான்  சொல்ல  வேண்டும். ஒரு  அரசியல்  கட்சி  அப்படிப்  பேசுவது  விவேகமாகாது.

“அதனால்  இழப்பு  பிஎன்னுக்குத்தான். ஏனென்றால்,  பெர்காசாவின் பெரும்பாலான  உறுப்பினர்கள்  தேர்தல்  நேரத்தில்  வாக்களிக்கும்  வாக்காளர்கள்  ஆவர்”.

டானின்  பேச்சு  பிஎன்னுக்கு  அழிவைக்  கொண்டுவரும் எனறவர்  எச்சரித்தார்.

“கெராக்கான் இளைஞர்  தலைவரின்  பேசுவதற்குமுன்  கண்ணாடியைப்  பார்த்துக்கொள்வது  நல்லது. பிஎன்  இல்லையென்றால்  அவருடைய  கட்சியும்  இருக்காது”, என்று  அவர்  சொன்னார்.