உயிர் கொல்லி எபோலாவை கண்டு அஞ்ச வேண்டாம்: ஒபாமா வேண்டுகோள்

obamaமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வரும்  நிலையில்  அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது.

அமெரிக்காவில் மூன்று எபோலா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  ஏறத்தாழ 100 பேர் எபோலா வைரஸ் தாக்குதல் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்படுகின்றனர்.

இந்த வைரஸ் நோயை ஒபாமா நிர்வாகம், கையாண்டு வரும் விதம், விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஒபாமா உரை ஆற்றினார்.

மேற்கு ஆப்பிரிக்க மக்களின் அமெரிக்க பயணத்துக்கு தடை விதிக்கும் யோசனையை ஏற்பதற்கில்லை. இப்படி உலகின் ஒரு மொத்த பகுதிக்கே சீல் வைக்க முற்படுவது, நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்.

வைரஸ் நோய் கண்டு யாரும் அச்சம் அடையவும் வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.