படுகொலை செய்வது எப்படி? சிறுவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயிற்சி

school_jihad_001எதிரிகளை எவ்வாறு தலை துண்டித்து படுகொலை செய்ய வேண்டுமென, சிறுவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயிற்சி அளித்து வருவது பரபரப்பை அதிகரித்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை இணைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்கியதுடன், புதிய சட்ட திட்டங்களை வகுத்துள்ளனர்.

இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம், இவர்களை ஒடுக்க அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் குண்டு வீசி தாக்குதல் நடத்திவருகின்றன.

இந்நிலையில் யூடியூப்-பில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு போர் பயிற்சி அளிக்கின்றனர், எதிரிகளை எவ்வாறு தலை துண்டித்து கொலை செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கின்றனர்.

மேலும் பிணைக் கைதிகளை துன்புறுத்துவது, ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவது எப்படி? போன்றவை குறித்தும் அதிதீவிர பயிற்சி கொடுக்கப்படுகிறது.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தீவிரவாதிகள் இப்பாடத்தை கட்டாயமாக புகுத்தியுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பெற்றோரிடம் அவர்களின் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டுகின்றனர், இதனால் விருப்பமின்றி அப்பயிற்சிக்கு பெற்றோர் குழந்தைகளை அனுமதிப்பதாக தெரிகிறது. -http://world.lankasri.com