தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! தமிழர்கள் நிமிர வில்லையே ஏன் ? -பொன். ரங்கன்

contentwriting_1தமிழ் மாநாடுகளும் தமிழர்களும் – நாடுதோறும் தமிழ் மாநாடுகள் நடத்தியதன் பலன்தான் என்ன? 2013 -2025 மலேசியாவில் தமிழ்க்கல்விக்கு ஆபத்து, அழிவு என்று தமிழ் அறவாரிய திரு ஆறுமுகம் அவர்கள் கத்தை கத்தையாய் ஆய்வு செய்துள்ளார். அவரை யாரும் அழைத்து தமிழ் சிக்கலை பேசாத மாநாடுக்கு பேர் தமிழ் மாநாடு ? தமிழ் நாட்டில் தமிழும் தமிழ் இனமும் தமிழ் ஈழ சிக்கலும் சிரிப்பா சிரிக்க வைகோ வந்து இங்கு என்ன கிளப்ப போறார்…..?

தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! ஆனால் தமிழ்த தலைவர்கள் உருபடவில்லையே ஏன் ? வைக்கோ பதில் சொல்ல்வாரா ? ஒரு இனத்து வாக்குகள் வேண்டும் இதனால் தமிழ் மாநாடு மாற்றானிடம் மண்ணாகட்டுமா?

உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும்
தொடங்கும் கலகம் குனிந்துவிடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும்
தோள்கள் திமிரட்டும்
துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும்
தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும்….

இந்த பாடலை மீண்டும் மீண்டும் பாடி பார்க்கிறேன் ! ஆனால் அந்த தமிழ் ,தமிழன் வெற்றி திசை மட்டும் தெரியவில்லை ?

தமிழ் மாநாடுகள் தமிழனுக்குத்தானே! ஆனால் தமிழ்த தலைவர்கள் உருபடவில்லையே ஏன் ? வைக்கோ பதில் சொல்ல்வாரா ? ஒரு இனத்து வாக்குகள் வேண்டும் இதனால் தமிழ் மாநாடு மாற்றானிடம் மண்ணாகட்டுமா?

2014 இறுதி இரண்டு மாதங்களில் பினாங்கில் உலகத்தமிழ் மாநாடு, கோலாலம்பூரில் 10 வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு , தமிழ் விழா என்று மூன்று முத்தான நிகழ்வுகள் நடக்க உள்ளது மனதுக்கு மகிழ்ச்சிதான்.

இதில் பினாங்கு மாநாடு புதிதாக முளைத்துள்ளது. உலகத்தமிழ் ஆராச்சி மாநாடு பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கிளை மறுபடி முளைத்துள்ளது. தமிழ் விழா கடந்த 7 ஆண்டுகளாக ஒரு தமிழ் ஆர்வலர் தனி பாஸ்கரன் முயற்சியில் நலமே நடந்து வருகிறது.

உலகத்தமிழ் ஆராச்சி மாநாடும் . புதிதாய் வந்துள்ள பினாங்கு உலக தமிழ் மாநாடும் இரண்டு பலம் பெரும் அரசியல் வாதிகள் நடத்தும் மாநாடுகளாகும்.

மூன்றும் தமிழுக்கு மகுடம் சூட்டும் மாநாடுகள்தாம் என்பதில் சந்தேகமில்லை. கடலில் கப்பல்கள் இலக்கு நோக்கி அடைய முன்பெல்லாம் கடல் கரை விளக்கு வைத்து கப்பல்கள் வந்து கரையை தொடும். இப்போதெல்லாம் பல திசை காட்டிகள் இருப்பதால் மாலுமிகள் தூங்கினாலும் கப்பல் கரையை தொட்டுவிடும்.

எனக்குத்தெரிந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இனி சாவும் என்று யாரோ சொன்னதாக ஒரு புலம்பல் இன்றுவரை உண்டு. இதை பொய்யாக்கிய பெருமை மலேசியா தமிழர்களுக்கு உண்டு என்பதை உலகம் அறியும், தமிழர் நாட்டு இலக்கிய அறிவர்களும் இதை ஒப்புக கொண்டு நம்மை பாராட்டுகின்றனர் என்பதில் மகிழ்ச்சிதான். இதில் தமிழ் மொழிக்கு கணினி உலகில் வளம் சேர்த்த மலேசியா மற்றும் தமிழக தமிழ் ஆர்வலர்களை மதிக்கிறோம்.

தமிழ் வளரும் வேகத்தில் தமிழன் வளர்ந்தானா ? இவன் வளரவில்லை என்றால் இந்த உழைப்புகள் யாவும் என்னவாகும் என்ற போராட்ட காலத்தில் உலகத்தமிழர்கள் உள்ளோம்.
தமிழில் பிழைக்க, அரசியல் நடத்த, தமிழ் வளர்ப்பதுபோல் தன்னை தமிழால் வளர்ந்து அரசியல் நடத்தும் திராவிட குழுமத்தில் பலர் உள்ளனர்.

ஆனால் தமிழன் தமிழால்,தமிழ் இனத்தால் வளர்ந்துள்ளானா? என்றால் பெரும்பாலான தமிழ் தலைவர்கள் அரசியல் நடத்த அவர்களைப்ப்போல் இவனும் தமிழை தற்காலிக
தடமாக பாவித்து கரை சேர்ந்த நிலையில் துடுப்பை குப்பையில் வீசி விட்டு சுய வாழ்வியல் அகப்பையை நிரப்பிக்கொண்டர்வர்களதாம் அதிகம் இதனால் தமிழன் என்ற இனம் நோக்க்மின்றியும் கொள்கையின்றியும் உருப்படாமல் போனது நமது துர்ரதிஸ்டம் என்பேன்.

தமிழை அரசியலுக்கு அனுபவித்து அரசியல் அரசு ரீதியில் தமிழுக்கு ஆபத்து வரும்போது ஒருத்தனையும் பார்க்க முடியவில்லை. மலேசியாவில் ஆளும் கட்சி தாய் கட்சி என்று ம இ கா இருந்தும் 2013 -2025 புதிய கல்வி கொள்கையில் தமிழுக்கு கிடைத்துள்ள அழிவை தட்டி கேற்க யாருமில்லா விளங்காததன தமிழ் அரசியல் வாதிகள் (வதிகள் ) குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் கருவாடுகளாக போயினர்.

அறுக்க மட்டாதன் கையில் அறுபதெட்டு அருவாள் என்பது போல அரசு அரசியல் ரீதியில் ஒரு பக்கம் தமிழ் மொழிக்கு அழிவை கண் முன்னே வைத்துகொண்டு நாடுதோறும் தமிழ் மாநாடுகள் நடத்துவதின் பலன்தான் என்ன?

கூடி களையும் கூட்டம் என்பது இந்த தமிழனுக்கா? அல்லது இதுபோன்ற மாநாடுகளில் புகுந்து தமிழை தமிழன் அல்லாதவன் சரிக்கும் சம்பரதாயம்தான் என்ன?

தமிழ் நாட்டில் தமிழ் ஈழம் தமிழர்களை காட்டி பல கூட்டணிகள் அரசியல் வாழ்வாதாரம் நடத்தும் மோகத்தில் இங்கு நடக்கும் பினாங்கு உலகத தமிழ் மாநாட்டிற்கு தமிழன் அல்லதா தமிழ் வழி தெலுங்கு வை கோவை தலைமைதாங்க வைத்துள்ள ஒரு தமிழனின் நிலையை ஆராய வேண்டிய காலம் வந்துள்ளது?

கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் ஈழம் ஒப்பாரியில் தான் மதிய அமைச்சில் அமைச்சராக இருந்த போது கூட ஒரு மண்ணையும் நகர்த்த முடியாமல் பேச்சில் ஓலத்தையும் ஒப்பாரிகளையும் தூவி தமிழர் நாட்டு தமிழர்களை /தமிழை வைத்து தமிழனி பந்தாடும் ஒருத்தரை பினாங்கு உலகத தமிழ் மாநாட்டிற்கு தலைமை தாங்க வைத்துள்ளது என்ன அறிவிலித்தனம் என்று யோசிக்கிறோம்?

தமிழ் எல்லார்க்கும் உரியது, வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்பதின் தமிழன் அல்லதான் வார்த்தை வசனத்தில் மயங்கி மக்கி இருக்கும் தமிழினத்தை ஏய்க்க மற்றொரு மாநாடா?

திராவிடத்தால் தமிழர் நாடும் ,தமிழ் இனமும் சீரழிந்த கோலங்கள் போதும் இனியாவது திருந்துவோம் என்றவர் இன்று திராவிடன் தீயில் ஈயாய் கொல்வது எனோ?

கோயம்புத்தூரிலும் பிறகு கோலாலம்பூரிலும் உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடுகளுக்கு தளமி ஏற்றார் பிறகு தமிழன் சீமானை வரவேற்று அரசியல் அலங்காரம் செய்ய ஒரு தமிழர் பணிப்படை விழா நடத்தி உலகத தமிழ் தலைவன் பட்டம் தந்தும் இதுதான் அடியா ? போதவில்லை …

தமிழன் எங்கே செல்கிறான் என்பதை மாற்றி, தமிழ் தலைகள் எங்கே அடைக்கலம் ஆகிறது என்ற மாநாட்டை கூட்ட வேண்டிய காலத்தில் உள்ளோமா?

உலக இனம் ரீதி மக்களுக்கு யாரவது ஒரு தலைவன் இருப்பான் ஏன் மூன்றாம் உலக நாட்டில் கூட தலைவர்கள் உருவாகிவிட்ட வேளையில் தமிழனுக்கு மட்டும் அந்த பாக்கியம் இல்லாமல் போய் பொய்யாகி விட்டத்தின் தலை விதிதான் என்ன?

மாநாட்டிற்கு நம்மை பிரதிபலிக்க ஒரு தலைமை இல்லாத இனமா?
இனக்கொள்கை போராட்டத்தில்தான் இந்த உலகம் வாழ்கிறது.
மகாத்மா காந்தியும் அதைதான் செய்தார்?

வீடு பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்பு கேட்டவன் வரிசையில் நிற்காமல் தண்ணி கொண்டு அணைக்க வருபவன்தான் தலைவன்.
உலகத தமிழன் வீடுகள் எல்லாம் இன /மொழி உரிமை எரிந்து புகைந்ததுக்கொண்டு வருகிறது. மாநாடுகள் இலக்கு நோக்கி இல்லாமல் தனி மனித லச்சங்களுக்கு அர்ச்சனை செய்வதை இனம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

பொதுவில் இன முதலீட்டில் தனி மனித திமுருகளை என்று அடக்குகிறோமோ அன்றுதான் நல்ல அரசியல் நெறிகள் தோன்றும் .இது துரோகம் என்ற பயம் இருந்தால்தான் நமது இன, மொழி உரிமை தூய்மை பெரும். மொழியே இனத்தில் விழி. இங்கு இனத்தலைவர்களே அருவருடியாக இருந்தால் புதிய அரசியல் கடிவாளம் கட்டுவது நமது கடமை. அதற்கு இன விழிப்பும், மொழி தெளிவும் தெரிந்த தைரியமிக்க தலைவன் தேவை.

-பொன். ரங்கன்