ஊடகங்களிடம் சென்றதால் மருத்துவ அறிக்கை கொடுப்பது இழுத்தடிக்கப்படுகிறதாம்

rameshகடந்த  வெள்ளிக்கிழமை  காலமான  ஜி.தினேஷாவின் பெற்றோர், தங்களுக்கு  மகளின்  மருத்துவ  அறிக்கை  கொடுக்கப்படவில்லை  என  அசுந்தா  மருத்துவ  மனைக்கு  எதிராக  இரண்டாவது  முறையாக போலீசில்   புகார்  செய்துள்ளனர்.

“எங்களுக்கு  உதவி  செய்ய  ஒரு  வழக்குரைஞரையும்  ஏற்பாடு  செய்யப்போகிறோம்”, என தினேஷாவின்  உறவினர்  ரமேஷ்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

விவகாரத்தை  ஊடகங்களுக்கு  எடுத்துச்  சென்றதால்  மருத்துவ  மனை  மருத்துவ  அறிக்கையைக்  கொடுக்க  மறுப்பதாக  அவர்  சொன்னார்.

இதனிடையே, அசுந்தா  மருத்துவ மனை  தலைமை  செயல்  அதிகாரி  பீட்டர்  டி.எல். லியோங்  மருத்துவ  அறிக்கைக்காக  அக்குடும்பத்தினர்  முறையாக  மனுச்  செய்ய  வேண்டும்  என்றார்.