பயங்கரவாதச் சட்டம் என்ற பெயரில் ஐஎஸ்ஏ-க்குப் புத்துயிர் அளிக்கப்படவில்லை

hishபயங்கரவாதத்துக்கு  எதிரான  புதிய  சட்டம்,  ஏற்கனவே  இரத்துச்  செய்யப்பட்ட  உள்நாட்டுப்  பாதுகாப்புச்  சட்டம்  போன்றதல்ல  எனத்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  கூறினார்.

“இது பயங்கரவாதம் பற்றி  மட்டுமே  கவனம்  செலுத்தும்”, என்றவர்  இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

முன்னதாக  இஸ்லாமிய  அரசு  மிரட்டல் மீது  வெள்ளை  அறிக்கை ஒன்றை  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்த  அரசாங்கம்  பயங்கரவாதத்துக்கு  எதிராக புதிய  சட்டங்களை  உருவாக்குவதும்  ஏற்கனவே  உள்ள  பயங்கரவாத-  எதிர்ப்புச் சட்டங்களை  வலுப்படுத்துவதும்  அவசியமாகும்  என்றது.