கேவியெஸ்: நஜிப் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்

pppதேச  நிந்தனைச்  சட்டம்  விஷயத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அடித்த  பல்டியை  மக்கள்  முற்போக்குக்  கட்சி(பிபிபி)த்  தலைவர்  எம்.கேவியெஸ்  ஆதரிக்கிறார்.

“இந்த  ஆட்டத்தில்  இரண்டு  விதிகள்தான். போஸ்  எப்போதும்  சரியாகத்தான்  சொல்வார்.  போஸ்  தவறாக  சொல்லியிருந்தால்  முதல்  விதி  குறிப்பிடுவதைப்  பின்பற்றுக(அது , போஸ் எது  சொன்னாலும்  சரியாகத்தான்  இருக்கும்)”. இன்று புத்ரா  வாணிக  மையத்தில்,  பிபிபி  மாநாட்டில்  கேவியெஸ்  இவ்வாறு  கூறினார்.

அது “அமைதியையும்  ஒற்றுமையையும்”  நிலைநிறுத்தும்  முடிவு  என்று  வருணித்த  அவர்  அதுவே  “முன்னேற்றத்துக்கான  பாதை” என்றும்  சொன்னார்.