பிஎன் எம்பி: கட்சித்தாவலைத் தடுக்கவே தைவான் பயணம்

mp's2008-இல், பிஎன் எம்பிகள்  பக்கத்தான்  ரக்யாட்டுக்குக்  கட்சிமாறி  விடுவார்களோ  என்ற  பயத்தினால்தான்  சுமார்  40  பேர்  செப்டம்பர்  16-க்கு  முன்னதாக  தைவானுக்கு  அனுப்பப்பட்டார்கள்  என்பதை  பிஎன்  எம்பி  ஒருவர்  ஒப்புக்கொண்டார். பிரதமர்  நஜிப்  உள்பட, பிஎன்  தலைவர்கள்  நெடுகிலும்  அதை  மறுத்து  வந்துள்ளனர்.

இன்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்,  குறுக்கு  விசாரணை  செய்யப்பட்டபோது  நாடாளுமன்ற  துணைத்  தலைவர்  ரொனால்  கியாண்டி, செப்டம்பர்  16  சூத்திரதாரியான  அன்வார்  இப்ராகிம்  அவர்களை  அணுகாதிருக்கவே  அந்த  ஏற்பாடு  என்பதை  ஒப்புக்கொண்டார்.

“அன்வார்  அவர்களை  அணுகாமலிருக்கத்தான் அப்பயணம்  ஏற்பாடு  செய்யப்பட்டதா?”, என ரஞ்சிட்  சிங்  வினவினார்.

அதற்கு  கியாண்டி, “ஆமாம்”, எனப்  பதிலளித்தார். அப்பயணத்தில்  சென்று  வந்தவர்களில்  அவரும்  ஒருவராவார்.

“செப்டம்பர்  16  நிகழ்வதைத்  தடுக்கக்த்தான்   பயணம்  ஏற்பாடு  செய்யப்பட்டதா?”  என  வழக்குரைஞர்  மறுபடியும்  வினவினார்.

கியாண்டி  மீண்டும்  “ஆமாம்”  என்றார்.