சாபா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகலைக் கட்சிக்கு தெரிவித்து விட்டார்

inanamபிகேஆரின் இனானாம்  சட்டமன்ற  உறுப்பினர்  டாக்டர் ரொலண்ட் சியா  பதவி  விலகும்  எண்ணத்தைக்  கட்சியிடம்  ஏற்கனவே  தெரிவித்து விட்டார்  என்பதைத்  தலைமைச்  செயலாளர் ரபிஸி  ரம்லி  மலேசியாகினியிடம்  இன்று  உறுதிப்படுத்தினார்.

தம்  உடல்நிலை  “மோசமடைந்திருப்பதாகவும்” அதனால்  பதவி விலகுவதாகவும்  சியா  கடிதம் வழியாகவும்  தெரியப்படுத்தியுள்ளார்  என  ரபிஸி  கூறினார்.

“ஆண்டு  இறுதியில்  வெளிநாட்டிலிருந்து  திரும்பியதும்  கட்சித்  தலைவர்களுடன்  கலந்து  பேசுமாறு  அவருக்கு  ஆலோசனை  கூறியுள்ளோம். அந்த  இடத்தை வைத்திருப்பதும்  விலகுவதும்  அவரைப்  பொறுத்ததாகும்”, என்றாரவர்.