அமைச்சர்: இறந்தவரின் மருத்துவ அறிக்கை அவரின் உறவினர்களிடம் கொடுக்கப்பட வேண்டும்

teenஅசுந்தா  மருத்துவமனை  இறந்துபோன  பதின்ம  வயது  பெண் ஜி.தினேஷா-வின்  முழு  மருத்துவ  அறிக்கையை  அவரின்  பெற்றோர்களிடம்  கொடுக்க  வேண்டும்  என்கிறார்  சுகாதார  அமைச்சர்  டாக்டர்  சுப்ரமணியம்.

“அது  அவர்களின்  உரிமை”, என்றும்  அவர்  வலியுறுத்தினார். என்ன  நடந்தது  என்பதை  விவரிக்கும் முழு  அறிக்கையைக்  கொடுப்பது  வழக்கமான  நடைமுறைதான் என்றும்  அவர்  குறிப்பிட்டார்.

தினேஷாவின்  மரணத்துக்கு  மருத்துவமனையே  காரணம்  என்று  அவரின் பெற்றோர்  குற்றம்  சாட்டுகின்றனர். மருத்துவப்  பணியாளர்கள்  சிகிச்சை  அளிப்பதில்  அலட்சியமாக  நடந்து  கொண்டார்களாம்.

ஆனால், பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  அம்மருத்துவமனை  அவர்களின்  குற்றச்சாட்டை  மறுக்கிறது.

இவ்விவகாரத்தை ஆராயும்படி   அமைச்சின்  தனியார் மருத்துவப் பராமரிப்புக் கட்டுப்பாட்டுப் பிரிவைப் பணித்திருப்பதாக  டாக்டர்  சுப்ரமணியம், தெரிவித்தார்.