கழட்டி போடு! -உழவன்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

avizhtthupoduமடமை கலந்த ஆரிய உடை அணிந்து
உலக வீதியில் உலா வரும் தமிழா !
அது உன் (தன்) மானத்தை காக்கவில்லை
மாறாக நீ
மண்னிழந்து, மதியிழந்து,
உறவுயில்லா ஆண்டியாக
அனாதையாக நிற்பதை,
அம்மனமாக காட்டுகிறது.
சுத்த தமிழனாக மாறிப்பார்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
என்ற வார்த்தைக்கு அர்த்தம் பிறக்கும்
நீ செல்லும் பாதையிலும்
ஓர் ஒளி பிறக்கும்
உன் பின்னால் வரும்
உன் தலைமுறைக்கும்
ஒரு வழி பிறக்கும்
உன் வம்சத்துக்காக ஒரு நாடும் பிறக்கும்.
அறிவாயா தோழா
தைரியமாக அவுத்து போடு.

( படிக்கும் தமிழர்கள் அவுத்து என்ற வார்த்தைக்காக என்னை மன்னிக்க வேண்டும். என் மன கொந்தழிப்பினால் உருவான வார்த்தையே அது. முகம் சுழிப்பவர்கள் கழட்டி என்று மாற்றி படிக்கவும். நன்றி )

-உழவன்

TAGS: