பெர்சே பேரணி: புத்ரா ஜெயாவின் இழப்பீட்டுக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது

bersihமூன்றாண்டுகளுக்குமுன் நடந்த  பெர்சே பேரணியின்போது ஏற்பட்ட  சேதங்களுக்கு  இழப்பீடு  கேட்டு அரசாங்கம்  செய்திருந்த  கோரிக்கையை  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளை 2012ஆம்  ஆண்டு அமைதிப்  பேரணிச்  சட்டம்  அரசமைப்புக்கு  உட்பட்டதே  என்றும்  அது  தீர்ப்பளித்தது.

பெர்சே  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசனுக்கும் அந்த  அமைப்பின்  இயக்கக்  குழு  உறுப்பினர்  14பேருக்கும்  எதிராக  அரசாங்கம்  தொடுத்த  வழக்கில்  நீதிமன்றம்  இவ்வாறு  தீர்ப்பளித்துள்ளது.

அரசாங்க  இழப்பீட்டுக்  கோரிக்கையை  நிராகரித்த  நீதிபதி  ஜான் லூயிஸ்  ஓ’ஹாரா, முன்னாள்  இயக்கக்குழு  உறுப்பினர்  வொங்  சின்  ஹுவாட்  சட்டவிரோதமாக  கைது  செய்யப்பட்டுக்  காவலில் வைக்கப்பட்டதற்காகவும்  தாக்கப்பட்டதற்காகவும்  ரிம21,000 இழப்பீடு  வழங்க  வேண்டும்  என்று  தீர்ப்பளித்தார்.

மேலும், வழக்குச்  செலவுகளுக்காக  வொங்குக்கு ரிம30,000  கொடுக்குமாறும்  உத்தரவிட்டார்.