பிரதமரின் சமாதானத் தூதுவராக பணியாற்ற சாமிவேலு தயார்

samyமஇகாவின்  உள்கட்சிப்  பூசலில்  நடுவராக  இருந்து  அமைதிப்பணி  ஆற்ற  முன்வந்திருக்கிறார்  அக்கட்சியின்  முன்னாள்  தலைவர்  எஸ்.சாமிவேலு.

ஆனால், பிஎன்  தலைவரும்  பிரதமருமான  நஜிப்  அப்துல்  ரசாக்  கேட்டுக்கொண்டால்  மட்டுமே  அவர்  அப்பொறுப்பை  ஏற்பார்.

“நானே  முந்திகொண்டு  நடுவராக  இருக்க  விரும்புகிறேன்  என்று  சொல்ல  முடியாது.

“அவர்கள்  விரும்பினால்  நடுவர்  பணியாற்றத்  தயார்”, என  இன்று  காலை  மலாயாப்  பல்கலைக்கழத்தில்  செய்தியாளர்களிடம்  சாமிவேலு  கூறினார்.