“மலேசியத் தமிழர் காங்கரசுக்கு” காலம் கனிந்து விட்டது.

contentwriting_1ம இ கா எனும் மலேசியன் இந்தியன் காங்கரஸ் முதன் முதலில் தமிழர் காங்கரஸ் என்ற பேரில்தான் முன் மொழியப்பட்டு பேசப்பட்டதாம். பிறகு சீக்கியர் ஆங்கில ஆளுமையில் இந்தியன் என்ற முனைப்பை தந்து மாற்றினார் என்று என் அப்பா சொன்ன கதையை நினைவு படுத்த ஆசைப்படுகிறேன்.

எதற்கும் ஒரு அடிப்படை வரலாறு வேண்டும் ஆதலால் …என் தந்தை 1908 திண்டிவன் செஞ்சியில் பிறந்தவர். 1920 சஞ்சியில் மலாயா வந்தார். சயாமில் காடுவெட்டி மேடு தட்டி ரோடு போட்டு தப்பித்து தாய்லாந்த்தில் மறைந்து என் தாய் மாமனோடு எப்படியோ கோல சிலாங்கூர் வந்தார்.

தமிழின தளபதிகள் தலைவர் கணபதி ,வீர சேனாவோடு பழகி தோட்ட தொழிலாளர் போராட்டத்தில் இறங்கி 1940 களில் ஆற்று வழியாக சபாக் பெர்ணம் தாண்டி சுங்கை பெர்ணம் தோட்டம் பிறகு குரங்காட்டி தோட்டம் உலு பெர்ணம் என்று 1984ல் இயற்கை அடைந்தார். இவர் ஒரு தொழில் சங்கவாதியாக இருந்தமையால் தமிழர்கள் சார்ந்த பல கதைகளை கூறினார். அதில் ஒன்றுதான் ம இ கா வரலாறு.

1984ல் தமிழ் நேசனின் 60தாம் ஆண்டு மணிவிழாவில் கலந்துக்கொள்ள கோலா லம்பூர் வந்த என் தந்தை அந்த விழா முடிந்து மறைந்தார் ..அவர் விட்டு சென்ற அந்த மணிவிழா மலர் மட்டும் பத்திரமாக வைத்துள்ளேன். அதோடு சயாம் மரண இரயில் எனும் ஐயா ஆர் .சண்முகம் எழுதிய புத்தகத்தையும் ஐயா தமிழியம் மு மணிவெள்ளையன் இதழையும், உலகத தமிழர் பண்பாட்டு இயக்கத தலைவர் ஐயா ஆசிரியர் இர .ந . வீரப்பனார் வெளியிட்ட 3வது உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாட்டு இதழையும் இந்த கட்டுரைக்கு துணையாக எடுத்துக்கொண்டேன்.

இந்த நினைவு முயற்சிக்குக காரணம் சமீபத்தில் 9 வது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முனைவர் சுபாஷினி அவர்கள் சொன்ன நமது சொந்த கதைகளையும் ஆவணப்படுத்தினால் நமது வரலாற்று பதிவுகளை நமது பிரதிநிதிகள் பயன் படுத்த இயல்பாக இருக்கும் என்ற புத்தியில் மலேசியத தமிழர்களின் அரசியல் எங்கு கோளாரானது என்று பதிவு செய்ய வ்ரும்புகிறேன்.

“திங்களோடும் செளும்பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும் பிறந்த
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்”

சத்தியமா ….அவர் ரஜூலா கப்பலில் வந்த பாடல் காட்சி கதை என்று நினைத்தேன்
என்று என் அப்பா சொல்லும்போதெல்லாம் என் அம்மா “இவருக்கு வேற வேலை இல்லை” என்பார் ..பிறகுதான் இது பாவேந்தர் பாடல் என்று அதன் தமிழ் வில்லங்கத்தை சொன்னார்.

இது எங்க அந்த அப்போதைய ம இ கா சிங்குகக்கு விளங்க போவுது ?இந்தியன் என்று ம இ கா மாநாடுகளை தமிழர்களை வைத்து ஆங்கில அரங்கேற்றங்கள் நடந்த ,இருந்த, இருண்டககாலங்கள் துன் சம்பந்தனுக்கு பிறகுதான் தமிழ் ஒலிக்கவும் ,ஒளிக்கவும் மாறியதாம்.ஆனால் தமிழர்கள் அதிகம் இருந்த ம இ கா களத்தில் இந்த தமிழர் காங்கரஸ் முயற்சி எழவே இல்லை என்பதுதான் நமது தமிழர்களின் ஏமாளித்தனம்.

சம்பந்தன் முடித்து மணிக்கா அதன் பின் சாமிவேலு வந்தும் கட்சியின் தலைவர்கள்தான் தமிழர்கள் ஆனால் பிற பதவிகள் எல்லாம் இதரவ்ர்கள் கொட்டமும் கூட்டமும் ஈயாய், பேயாய் சுத்த தமிழர்கள் வெறும் ஓட்டுப்போட மட்டும் பசுக்களாக மாறினார்கள். இன்றும் இதர ஜல்லி கட்டு இன காலைகள்தாம் ம இ கா வை ஆட்சி ஆளுது. உயர் பதவிகளும் அப்படித்தான் போனது. போகிறது.

இன்றைய தலைவர் கூட யார் என்று யாராலும் சொல்ல முடியாத அளவுக்கு கமுக்க நிலையில் இன ஆதிக்கம் இந்தியன் போர்வையில் புதையல் நாடகம் நடக்கிறது.
இன்று மலேசியத் தமிழர்களை ஏழு கட்சிகளில் இடரச்செய்த சிறுமை சாமிவேலு காலததில்தான் நடந்தது என்றால் அவரே அதை ஒத்துக்கொள்வார் ! இதில் பல மரபுக்கதைகள் உண்டு. புதுக்கவிதைகளில் இன்று ம இ கா வில் பல சீரியல்கள் ஓடினாலும் சாதிமையும், இனமும் பட்டாம் பூச்சிகலாக மின்னியல் அறையில் ஆளுமை வேட்டை நடக்கிறது.

ம இ கா வின் 6 லட்சம் உறுபினர்களில் 95 % சகிதம் தமிழர்களின் உரிமையை வெறும் 2000 பேராளர்கள் கொத்தி குதறும் பேராண்மை மாநாடு மீண்டும் கூடபபோகிறது.
மறுமலர்ச்சி என்று 30 ஆண்டுகளை விழுங்கிய சாமி வேலுவின் அரசியல் இறுதி காலம் வரை தமிழர்களை வளர்க்க வில்லை. ஆனால் தமிழர்களின் பொருளாதார முதலீடுகள் இந்த தமிழரல்லாத இதரவர்களின் உறவியல், குடும்பவியல் பூங்காவை பூஞ்சோலையாக்கி உள்ளதை மறுக்க முடியாது.

மலேசியாவில் பல மாநாடுகளை கண்டுவிட்ட தலைவர்கள் தமிழன் வாழ்வியல் அல்லது அரசியல் “தரமதை” இன்னும் அடையவில்லை.!
உலகத் தமிழ்ப்பண்பாடு மாநாட்டு மலரில் சாமிவேலு தமிழர்கள் பிறரை நம்பி கையேந்தி நிற்காமல் “சுயவுதவியில் வாழ்வோம் ” என்ற வார்த்தையை பாவித்துள்ளார். ஆனால்… நாட்டில் தமிழர்களுக்கு என்ன நடந்தது? இதில் இந்தியன் என்ற இதரவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். குறிப்பா மைக்காவை போர்த்திய இந்தியனான ஞாலிங்கம் , டோனி , நிஜம் சிங் இன்னும் பலரை பதிக்கலாம். இதில் சாமியும் ஏமாளிதான் அந்த அளவுக்கு தமிழன் என்பவர்கள் இந்தியனால் நம்பி கெட்டார்கள்.

சரி விடியலுக்குள் புகுவோம்…இன்று மலேசியாவில் இந்தியன் பாசறையில் தமிழர்கள் ,தெலுங்கர்கள், மலையாளிகள் என்ற மூன்று முக்கியஸ்தர்கள் இருந்தாலும் பின்னவர்கள் இருவரும் அவரவர் இயக்கம் வைத்து அரசியல் இன ஆளுமையில் இருப்பதுபோல தமிழர்கள் இல்லை, அல்லது இருக்க இவர்கள் விடுவதில்லை என்பது புதிய வெளிச்சம்.

இது இன பாகு பாட்டை பிரிக்க எழுதும் காகிதமல்ல கிழித்து பட்டமிட விச காற்றுமல்ல ..தமிழர்கள் தமிழனாக “அரசியல்” உணரும் காலம் கனிந்து விட்டது. அது ஒரு ராஜாங்கம். இனி ஜிங் ஜாங் போட நேரமில்லை. புதிய பொருளாதார் 60 ஆண்டுகள் 2020 முப்பது ஆண்டுகள் முடிய இன்னும் ஐந்தே ஆண்டுகள் மலேசியத தமிழர்களின் வாழ்வாதாரம் மேல்தரம் நோக்கி நடைபோட அரசியல் நகர்வில் நகருங்கள் தமிழர்களே ! நான் இன வாதி அல்ல என் இனத்தில் உரிமை விதி செய்ய உதவுபவன்.

அவர்கள் சங்கங்கள் வைத்து அரசியல் அமுக்கு நிலை வைத்து நமது ஓட்டில் நிமிர்ந்து நிமித்திகொண்டடனர் ! ம இ கா இவர்களுக்கு திறந்த பூங்கா பூத்ததை பறித்து, காய்ந்த இலைகளை தமிழர்கள் முட்டிக்கொள்ள மூட்டம் போடுவார்கள்.

தமிழ் நேசன் 60 ஆண்டு விழா மலரில் வந்த ஒரு கட்டுரை இப்படி எழுதுது: ” ம இ கா என்றால் இது இந்திய பேராயக்கட்சியாகவே இங்கு காலூன்றி தறிகெட்டு கிடக்கிறது. தமிழர் நெறி இழந்து சாதிகளை புணர்ந்து கிளைகளை பரப்பிக்கொண்டு “தனிததலைவா” என்று சாதி உறவு வட்டத்தில் வாழ்கிறது. இது உடைத்தெறிந்து தமிழன் என்ற இன மான உறவில் இந்த கட்சியில் தமிழர்கள் மட்டும் மனமாற்றம் உருமாற்றம் பெற வேண்டும்.

இன்று இ காவில் இருக்கும் மதவாதிகளிடம் தமிழாக்கம் இல்லை. ஆன்மிகம என்றால் இந்தத தமிழன் அடங்குவான் என்ற பிரம மந்திரம் நம்மை ஏமாற்ற போடும் வேஷம்.தமிழனை ஒழித்தால் தானும் தன் உறவுகளும் வாழும் என்ற அழித்தல் நாடகம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். தமிழனல்லா தலைவர்களின் சிண்டுபிடி பணத்துவேசம் வேலை தமிழர்கள் உணர்ந்து பிணக்குகளை அகற்றி ஆளும் மதிய அரசு கட்சிகள் தமிழனை மதிக்கும் நிலையில் 2018 தேர்தலில் களம் இறங்க முன்வர வேண்டும்.

திராவிடம் ,இந்தியம் ,இந்துமயம் பேசும் முக்கோண பித்தர்களிடம் தமிழர்கள் ம இ காவில் “தமிழன் என்ற சட்டையை மாட்டிக்கொண்டு முதிர்ச்சிப்பெற வேண்டுகிறோம்.
கட்சிக்கு மலேசியத தமிழர் காங்ரெசு என்று பெயரிட்டு பாகாத்தானில் இழந்த தமிழர்களை மீடடு எடுங்கள் …”முன்னணி” உங்களை முதலில் தமிழனாகா பார்க்கும். இதுவே நமது இறுதி வாக்குமூலம். தமிழராய் எழுவோம். வரும் ஜூலை மாத ம இ கா தேர்தலில் தமிழர் பேராள பெருந் தலைவர்களை தேடுங்கள், வெல்லுங்கள் !

பொன்.ரங்கன்