‘ஹாடி-யைக் கவிழ்க்கும் சதி’மீது விசாரணை செய்வீர்: கிள்ளான் பாஸ் கோரிக்கை

klangகுவாந்தான்  பாஸ் இளைஞர்  பகுதி  அனுப்பிவைத்த  ஒரு  மகஜர்மீது  கட்சி  ஒழுங்குக்  குழு  விசாரணை நடத்த  வேண்டும்  என  கிள்ளான்  பாஸ்  அதிகாரப்பூர்வமாகக்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

குவாந்தான்  பாஸ்  இளைஞர்  தலைவர்  நூர்ஸஸிலாவாட்லி  இப்ராகிம்  பிப்ரவரி 8-இல் அனுப்பிவைத்த  மகஜர், கட்சித்  தலைவர்கள்  சிலர்  அதிகாரத்தைத்  தவறாக பயன்படுத்துவதாகக்  குற்றஞ்சாட்டி யிருந்தது  என  கிள்ளான்  பாஸ்  செயலாளர்  முகம்மட்  பிரசாத்  ஹனிப்  கூறினார்.

பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கைக்  கவிழ்க்க  சதி  நடப்பதாகவும்  அது  கூறியது.

“கட்சியின் ஒருமைப்பாட்டுக்காக  புகார்தாரர்கள்மீதும் மகஜரில்  பெயர்  குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்மீதும்  விசாரணை  நடத்த  வேண்டும்  என  விரும்புகிறோம்”, என்றவர்  கூறினார்.