ரோஸ்மா நல்லெண்ணத்துடன் சொன்னதை அவருக்கு எதிராக திரித்துக் கூறிவிட்டார்கள்

hairரோஸ்மா  மன்சூர்  சிகை  அலங்காரக் கட்டணம்  உயர்ந்து   விட்டது  என்று    நல்லெண்ணத்துடன்  சொன்னார்  என  நிதி துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  கூறினார்.

“அவர்  சொன்னபோது  நானும்  அங்கிருந்தேன். வீட்டுக்கே  நேரில்  வந்து  சிகை  அலங்கரிப்பவர்களுக்கான சேவைக்கட்டணம்  ரிம1,200  என்று  சொன்னார்.

“அது உயர்வான  கட்டணம்  என்றுதான்  சொன்னார். அவர்  அதைக்  கொடுக்கவில்லை. உயர்வான  கட்டணம்  என்றவர்  முறையிடப்  போக  அதை எதிர்மறை  செய்தியாக  திரித்துக்  கூறி  விட்டார்கள். அவர்கள்  யார்  என்பது  உங்களுக்கே  தெரியும்”, என  மஸ்லான்  குறிப்பிட்டார்.