போலீசார் ஆயிஷாவையும் அவரை மிரட்டியவர்களையும் விசாரிப்பர்

ayshaகிளந்தான்  அரசு  ஹுடுட்டுக்கு  முன்னுரிமை  கொடுப்பதைக்  கேலி  செய்யும்  காணொளியின்  அறிவிப்பாளரான  பிஎப்எம்  நிலையத்தைச்  சேர்ந்த  ஆயிஷா  தாஜுடினுக்கு  மிரட்டல்  விடுத்தவர்கள்  விசாரிக்கப்படுவார்கள்  என  போலீஸ்  இன்று கூறியது. போலீசார்  அறிவிப்பாளரையும்  விசாரிப்பார்கள்.

“இரு  தரப்பினரையும்  போலீஸ்  விசாரிக்கும். பிஎப்எம்  அறிவிப்பாளரையும்  விசாரிக்கும், அவருக்கு  மிரட்டல்  விடுத்தவர்களையும்  விசாரிக்கும்.

“அறிவிப்பாளருக்கு உரையாடலை  எழுதியவரும்  விசாரணைக்கு  அழைக்கப்படுவார்”, என  போலீஸ்  படைத்  தலைவர் காலிட்  அபு   பக்கார்  டிவிட்  செய்திருந்தார்.

ஹுடுட்  அமலாக்கத்தைக்  கேலி  செய்யும்  காணொளி  அந்த  வானொலியின்  இணையத்தளத்தில்  இடம்பெற்றதை  அடுத்து ஆயிஷாவைக்  கற்பழிக்கப்போவதாக்வும்  கொலை  செய்யப்போவதாகவும்  மிரட்டல்கள்  எழுந்தன.