நடுரோட்டில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட ஜோடி: வேடிக்கை பார்த்த மக்கள்

stone_couple_001ஈராக்கில் கள்ளக்காதல் ஜோடி ஒன்றை கல்லால் அடித்து தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்-யின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கொலை, கொள்ளை, கள்ளக்காதல், ஓரினச்சேர்க்கை மற்றும் மத அவமதிப்பு போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வடக்கு ஈராக்கில் தங்கள் கட்டுப்பாட்டிற்குட்பட்ட மொசூல்(Mosul) நகரில் கள்ளக்காதலில் ஜோடி ஒன்று ஈடுபட்டுள்ளது.

இதனையறிந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்த ஜோடியை, நடுத்தெருவிற்கு இழுத்து வந்து, கல்லால் அடித்து மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

இச்சம்பவத்தை அங்கு நின்றிருந்த ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர்.

-http://world.lankasri.com