சுற்றுலா பயணிகளை சிறைப்பிடித்த தீவிரவாதிகள்: 17 பேர் பலி

somalia_attack_001சோமாலியாவில் உணவகத்தை சிறைப்பிடித்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் பலியாகினர்.

சோமாலியாவின் தலைநகர் மொகாதிஷூவில்(Mogadishu Hotel) உள்ள உணவகத்தை பயங்கர ஆயுதங்கள் ஏந்திய அல்-ஷபாப் தீவிரவாதிகள் நேற்று சிறைப்பிடித்தனர்.

அந்த உணவகத்தில் வெளிநாட்டு தூதர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர்.

உணவகத்தை தங்கள் வசம் கொண்டு வந்த தீவிரவாதிகள், வாகன நிறுத்தத்தில் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தையும் வெடிக்கச் செய்தனர்.

தொடர்ந்து உணவகத்தினுள் இருந்த நபர்கள் மீது கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 17 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் அமெரிக்க நேட்டோ படைகள் உதவிய நிலையில், சுமார் 12 மணிநேரத்துக்கு பின்னர் தீவிரவாதிகள் வசம் இருந்த உணவகம் மீட்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com