கைரி:‘நேரான பாலம்’ கட்டுவதே மலேசியாவின் விருப்பம்

bridgeஜோகூர்- சிங்கப்பூர்  பாலத்துக்குப்  பதிலாக நேரான  பாலம்  ஒன்றைக்  கட்டும்  சாத்தியத்தைதான்  மலேசியா  ஆராய்ந்து  வருவதாக  இளைஞர், விளையாட்டுத்  துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடின் கூறுகிறார்.

இரு  நாட்டுத்  தலைவர்களும்  இன்னும்  10  நாள்களில்  சந்திப்பார்கள்  என்றும்  அப்போது அவர்கள் அதை  ஆராய்வார்கள்  என்றும்  கைரி  சிங்கப்பூரில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

“ஜோகூருக்கும்  சிங்கப்பூருக்குமிடையில்  விரைவான  போக்குவரத்து  முறை  பற்றிப்  பேசுவதற்குமுன் ஒரு  பாலம்  கட்டும்  சாத்தியத்தை  ஆராய  வேண்டும்”, என்றவர்  சொன்னார்.

ஆனால்,  முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்  பரிந்துரைத்த  “வளைந்த  பாலம்” கட்டுவதில்  நஜிப்-நிர்வாகத்துக்கு விருப்பமில்லை  என்பதையும்  கைரி  வலியுறுத்தினார்.