பண்டிகார் இன்னமும் அவைத் தலைவராக இருப்பதில் நஜிப்புக்கு மகிழ்ச்சி

aminபதவி விலக  விரும்பிய மக்களைவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா பதவியில்  தொடர்ந்திருக்க  முடிவு  செய்திருப்பது  மகிழ்ச்சி  அளிப்பதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

இன்று  நாடாளுமன்றத்தில்  11வது  மலேசியத்  திட்டத்தைத்  தாக்கல்  செய்த  உரையாற்றிய  நஜிப், பண்டிகாரைக்  குறிப்பிட்டும்போது  “அவைத்  தலைவர்  அவர்களே”  என்று  சொல்லிச்  சற்று  யோசித்து “இன்னமும்  அவைத்தலைவராக  இரூப்பவரே” என்றும்  சேர்த்துச்சொல்லிச்  சிரித்தார்.

“மக்களவைத்  தலைவர்  இன்னமும்  மக்களவைத்  தலைவராகவே  இருப்பதைக் காண  மகிழ்ச்சியாக  இருக்கிறது”, என்றவர்  சொன்னதும்  அவையில்  வெடிச்சிரிப்பு.