அருள், ஷாரோல், எங்கே போனீர்கள்? டோனி புவா கேள்வி

tony1மலேசியா  மேம்பாட்டு நிறுவனத்  தலைமை  செயல் அதிகாரி(சிஇஓ)  அருள்  கந்தாவும்  முன்னாள்  சிஇஓ ஷாரோல்  ஹல்மியும்  பொதுக் கணக்குக்  குழுவிடம்(பிஏசி)  சாட்சியம்  அளிக்காமல்  எங்கே  சென்றார்கள்   என  அக்குழுவின்  உறுப்பினர்களில்  ஒருவரான  டோனி  புவா  வினவினார்.

“பிஏசி  சாட்சியம்  அளிக்க  வருமாறு  கூறியிருக்க  மே 25, 26-இல்  அவர்கள்  எங்கு  சென்றனர்? பிஏசி-யைச்  சந்திக்க  முடியாத  அளவுக்கு  வெளிநாட்டில்  அப்படி  என்ன  கூட்டத்தில்  கலந்துகொண்டார்கள்?”, என்றவர்  நாடாளுமன்ற  வளாகத்தில் செய்தியாளர்களிடம்  பேசியபோது  கேள்வி  எழுப்பினார்.