பட்டத்திளவரசர்:கவனம் செலுத்த வேண்டியது 1எம்டிபிமீது, என் மீது அல்ல

princeபுத்ரா  ஜெயா, துணிச்சலாகக்  கருத்துத்  தெரிவிக்கும்  அரச குடும்பத்தாரைக்  கவனித்துக்  கொண்டிராமல் 1எம்டிபி  மீதும்  மற்ற  தேசிய  விவகாரங்கள்மீதும்  கவனம்  செலுத்துவது  நல்லது  என ஜொகூர் பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிம்  வலியுறுத்தினார்.

“என்னைப்  பயன்படுத்தி 1எம்டிபி-இலிருந்தும்  மற்ற  தேசிய  விவகாரங்களிலிருந்தும்  கவனத்தைத்  திசைதிருப்ப  முயலாதீர்.

“நாட்டுக்கு  உண்மையாகவும்  நேர்மையாகவும்  பணியாற்றும்  தூய்மையான, வெளிப்படையான  அரசியல்வாதிகளே  தேவை”, என  துங்கு  இப்ராகிம்  ஜோகூர்  கால்பந்துக்  குழுவின்  முகநூல்  பக்கத்தில்  கூறினார்.

துங்கு  இப்ராகிம்   ஜோகூர்  கால்பந்துக்  குழுவின்  தலைவராவார்.